வலை­த­ளங்­களில் 1 கோடி விற்­ப­னை­யா­ளர்கள்வலை­த­ளங்­களில் 1 கோடி விற்­ப­னை­யா­ளர்கள் ... ஆயுள் காப்­பீட்டு துறையில்எச்.டி.எப்.சி., – மேக்ஸ் இணைப்பு ஆயுள் காப்­பீட்டு துறையில்எச்.டி.எப்.சி., – மேக்ஸ் இணைப்பு ...
அமெ­ரிக்க ஆய்­வ­றிக்கை சொல்­கி­றது... இந்­திய உணவு பொருட்கள் துறையில் சீர்­தி­ருத்த நட­வ­டிக்கை அவ­சியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2016
07:39

புது­டில்லி : ‘இந்­தி­யாவில் பெருகி வரும் நகர்ப்­பு­றங்­களின் தேவையை சமா­ளிக்க, உணவுப் பொருட்கள் துறையில் உட­ன­டி­யாக சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்’ என, அமெ­ரிக்­காவைச் சேர்ந்த, ‘சிகாகோ கவுன்சில் ஆன் குளோபல் அபேர்ஸ்’ என்ற அமைப்பின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விவரம்:இந்­தி­யாவில், நகர்ப்­பு­றங்கள் மிக வேக­மாக விரி­வ­டைந்து வரு­கின்­றன. வேலை­வாய்ப்பும் மக்­களின் வரு­வாயும் பெருகி வரு­கி­றது. அதற்­கேற்ப, நகர்ப்­பு­றங்­களில், உணவுப் பொருட்­க­ளுக்­கான தேவையும் அதி­க­ரித்து வரு­கி­றது. அடுத்த, 40 ஆண்­டு­களில், நகர்ப்­பு­றங்­களில், மக்கள் தொகை, இரு மடங்கு உயரும் சூழலில், உணவுப் பொருட்­களின் தேவையை சமா­ளிக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை இப்­போதே துவக்க வேண்டும். இந்­திய உணவுப் பொருட்கள் துறையின் பெரும்­ப­குதி, அமைப்பு சாராமல், பிள­வு­பட்டு காணப்­ப­டு­கி­றது. உணவுப் பொருட்கள் கொள்­முதல், வினி­யோகம், சில்­லரை விற்­பனை ஆகி­ய­வற்றில், ஒருங்­கி­ணைப்பு இல்­லாத நிலை உள்­ளது.
இவற்றை சமா­ளிக்க, அரசு, உணவுப் பொருட்கள் கொள்­முதல் நடை­மு­றை­களில், சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். மேலும், உணவுப் பொருட்­க­ளுக்­கான தீர்வை, நகர்ப்­புற உணவு வினி­யோ­கத்தை பாதிக்கும் வரிக் கொள்­கைகள் ஆகி­ய­வற்றில், மாற்றம் செய்ய வேண்டும். சிக்­க­லான கட்­டுப்­பாட்டு விதி­மு­றை­களை தளர்த்தி, உணவுப் பொருட்­க­ளுக்­கான ஆய்­வக வச­தி­களை மேம்­ப­டுத்த வேண்டும்.உணவுப் பொருட்­களின் சீரான வினி­யோ­கத்­திற்கு, அவற்­றுக்­கான கிடங்­குகள், குளிர்­ப­தன கூடங்கள், பதப்­ப­டுத்தும் மையங்கள் ஆகி­ய­வற்றை அதிக அளவில் அமைக்க வேண்டும். இத்­த­கைய நட­வ­டிக்­கை­களால், பெருகி வரும் நகர்ப்­புற மக்­களின் உணவுப் பொருட்­க­ளுக்­கான தேவையை சமா­ளிக்­கலாம்.
இந்­தி­யாவில், 36 ஆயிரம் கோடி டாலர் மதிப்­புள்ள, உணவுப் பொருட்கள் சந்­தையில், அதிக அளவில், பொது மற்றும் தனியார் துறை நிறு­வ­னங்­களின் முத­லீ­டு­களை ஈர்க்க வேண்டும். நகர்ப்­புற மக்­க­ளுக்கு உணவுப் பாது­காப்பு மட்­டு­மின்றி, போதிய ஊட்­டச்­சத்­துடன் உணவுப் பொருட்கள் கிடைக்­கவும், அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுஉள்­ளது.
இந்­திய உணவுப் பொருட்கள் துறையில், குறிப்­பிட்ட பிரி­வு­களை இலக்­காக கொண்டு, அவற்றில், அரசு முத­லீடு செய்ய வேண்டும். அத்­துடன், பெருகும் நகர்ப்­புற மக்­க­ளுக்­கான உணவுப் பொருட்­களின் தேவையை சமா­ளிக்­கவும், அவர்­க­ளுக்கு அதிக அளவில் ஊட்­டச்­சத்­துள்ள உணவுப் பொருட்கள் கிடைக்­கவும், தனியார் துறையை ஊக்­கு­விக்க வேண்டும்.-சிகாகோ கவுன்சில் ஆப் குளோபல் அபேர்ஸ்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)