பதிவு செய்த நாள்
20 ஜூன்2016
10:07
மும்பை : ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. அதற்கு பிறகு மீண்டும் ரிசர்வ் வங்கி கவர்னராக தொடர தான் விரும்பவில்லை என கடந்த வார இறுதியில் ரகுராம் ராஜன் அறிவித்தார். இதனால் புதிய கவர்னரை தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு இறங்கி உள்ளது.
ரகுராம் ராஜனின் முடிவு எதிரொலியால் ஒரு மாதத்திற்கு பிறகு சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடுமையாக சரிவடைந்துள்ளது. சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு 60 காசுகளுக்கு மேல் சரிந்தது. ரூபாயின் மதிப்பு ரூ.67.98 ஆக உள்ளது. முன்னதாக கடந்த வார இறுதியில் ரூபாயின் மதிப்பு ரூ.67.37 ஆக இருந்தது.
ரகுராம் ராஜன் தனது முடிவை இமெயில் மூலம் ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி கவர்னர் ஒருவர் தனது பதவிக்காலம் தொடர்பாக வெளிப்படையாக ஊழியர்களுக்கு இமெயிலில் தகவல் அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|