பதிவு செய்த நாள்
20 ஜூன்2016
14:26
விளைச்சல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் கேரட் விலை மீண்டும் சரியத் துவங்கி உள்ளது.தமிழகத்தில், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கேரட் சாகுபடி நடக்கிறது. கர்நாடகாவில் இருந்தும், தமிழகத்திற்கு கேரட் வருகிறது. கர்நாடகாவில், ஏப்ரல் மாத விளைச்சல் சரிந்ததால், தமிழகத்தில் இருந்து அனுப்பும் நிலை ஏற்பட்டது. கேரளாவிற்கும் அதிகம் சென்றதால், விலை கிடு கிடு என, உயர்ந்தது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில், 1 கிலோ கேரட், 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது. தற்போது, தமிழகம் மற்றும் கர்நாடகாவில், கேரட் விளைச்சல் அதிகரித்துள்ளது; வரத்தும் அதிகரித்துள்ளதால், விலை சரியத் துவங்கியுள்ளது. சில்லரை விலையில், கிலோ, 20 முதல், 30 ரூபாய் வரை கிடைக்கிறது.
அடுத்த மாதம் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என, தோட்டக்கலைத் துறையினர் கணித்துள்ளனர். இதனால், கேரட் விலை மேலும் குறையும். வெங்காயம், கத்தரிக்காயை தொடர்ந்து கேரட் விலை சரிந்துள்ளது, நுகர்வோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முருங்கைக்காய் கிலோ ரூ.120ஒரு மாதமாக கிலோ, 40 ரூபாய்க்கு விற்று வந்த முருங்கைக்காய், நேற்று, திடீரென, 120 ரூபாயாக உயர்ந்தது. வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, 20 லாரிகளில் முருங்கைக்காய் வரும். நேற்று, ஏழு லாரிகளில் மட்டும் வந்ததே விலை உயர்வுக்கு காரணம். 'விளைச்சல் குறைவால் வரத்து குறைந்துள்ளது; மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என, வணிகர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|