பதிவு செய்த நாள்
20 ஜூன்2016
23:58
புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, டிஜிட்டல் சேவை மூலம், மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு, பண பரிவர்த்தனை செய்துள்ளது. தனியார் துறையில், மிகப்பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு, நாடு முழுவதும், 1,800க்கும் மேற்பட்ட இடங்களில், பணம் டிபாசிட் செய்யும் இயந்திரங்கள் உள்ளன. இதன் மூலம், வாடிக்கையாளர்கள், வங்கி கிளைகளுக்கு சென்று, வரிசையில் காத்திருக்காமல், விரைவாக பணம் டிபாசிட் செய்கின்றனர். இந்நிலையில், கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, டிஜிட்டல் வணிகம் மூலம், மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு, பண பரிவர்த்தனை செய்துள்ளது. இதுகுறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, வாடிக்கையாளர்கள் மிக விரைவான வங்கி சேவை இருக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். இதற்காக, புதிய சேவைகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., அறிமுகம் செய்து வருகிறது. இதன் மூலம், எங்கள் வங்கி, கடந்த நிதி ஆண்டில், மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு பண பரிவர்த்தனை செய்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|