பதிவு செய்த நாள்
20 ஜூன்2016
23:59
புதுடில்லி : சர்வதேச தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கை:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சமீபத்தில் மேற்கொண்ட, மூன்று முக்கிய சீர்திருத்தங்கள், இந்திய நிதிச் சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். முதலாவதாக, வரி நடைமுறைகளில் செய்யப்பட்ட சீர்திருத்தங்களால், முதலீடுகள் மீதான, வரிக்கு பிந்தைய வருவாய் அதிகரிக்கும். அதுபோல, எப்.பி.ஐ., முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளில் செய்துள்ள மாற்றமும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும். புதிய திவால் சட்டம், நிதி நிறுவனங்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு துணிந்து கடன் கொடுப்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. திவால் நிறுவனங்களிடம் இருந்து, கடன் தொகையை விரைந்து வசூலிக்க, இச்சட்டம் உதவுகிறது. மேற்கண்ட மூன்று அம்சங்கள், இந்திய நிதிச் சந்தையின் வளர்ச்சிக்கு துணைபுரியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|