மஹா­நகர் காஸ் நிறு­வனம் இன்று பங்­குகள் வெளி­யீடுமஹா­நகர் காஸ் நிறு­வனம் இன்று பங்­குகள் வெளி­யீடு ... மத்­திய அரசு அதிரடி அறிவிப்பு; முக்­கிய துறை­களில் 100 சத­வீத அன்­னிய முத­லீடு மத்­திய அரசு அதிரடி அறிவிப்பு; முக்­கிய துறை­களில் 100 சத­வீத அன்­னிய ... ...
இந்­தி­யாவின் தனி­நபர் உருக்கு பயன்­பாடு உலக நாடு­க­ளுக்கு நிக­ராக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2016
00:02

புது­டில்லி : ‘‘மத்­திய அரசின் திட்­டங்­களால், இந்­தி­யாவில் தனி­நபர் உருக்கு பயன்­பாடு, அடுத்த, 10 ஆண்­டு­களில், சீனா உள்­ளிட்ட உலக நாடு­க­ளுக்கு நிக­ராக உயரும்,’’ என, பொது துறையைச் சேர்ந்த, ‘செயில்’ நிறு­வ­னத்தின் தலைவர் பி.கே.சிங் தெரி­வித்­து உள்ளார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது: உல­க­ளவில், உருக்கு உற்­பத்­தியில், இந்­தியா மூன்­றா­வது இடத்தில் உள்­ளது. ஆனால், உருக்கு பொருட்கள் பயன்­பாட்டில், மிகவும் பின்­தங்­கி­யுள்­ளது. உலக நாடு­களில், ஒரு நபரின் உருக்கு பயன்­பாடு, சரா­ச­ரி­யாக, 216.6 கிலோ என்ற அளவில் உள்­ளது. இது, இந்­தி­யாவில், 2014 நில­வ­ரப்­படி, 59.4 கிலோ­வாக உள்­ளது. இந்த நிலையை மாற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மத்­திய அரசு எடுத்து வரு­கி­றது. அடிப்­படை கட்­ட­மைப்பு, மின்­சாரம், ரயில்வே உள்­ளிட்ட துறை­களில், ஏரா­ள­மான பணிகள் துவங்­கப்­பட்­டுள்­ளன. இதனால், உருக்கு பொருட்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது. அடிப்­படை கட்­ட­மைப்பு துறையில், வரும் ஆண்­டு­களில், 1 லட்சம் கோடி டாலர் முத­லீடு குவியும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதனால், தொழில் துறை, 11 – 12 சத­வீத வளர்ச்சி காணும். நகர்ப்­பு­றங்­களில் மக்கள் தொகை அதி­க­ரிக்கும்.
மத்­திய அரசின், ‘அனை­வ­ருக்கும் வீடு’ திட்­டத்தின் கீழ், வரும், 2022க்குள், கிரா­மப்­பு­றங்­களில் 2.95 கோடி வீடுகள் கட்­டப்­பட உள்­ளன. இத்­துடன், சாலை வச­தி­யற்ற அனைத்து கிரா­மங்­க­ளுக்கும் சாலை வச­தி­களை ஏற்­ப­டுத்தும், ‘பிரதான் மந்­திரி கிராம் சதக்’ திட்­டமும், உருக்கு பொருட்­க­ளுக்­கான தேவையை பன்­ம­டங்கு அதி­க­ரிக்கச் செய்யும். ரயில்வே துறையில் குவியும் தனியார் முத­லீடு, புதிய மற்றும் விரி­வாக்கத் திட்­டங்­களால், உருக்கு பயன்­பாடு மேலும் பெருகும். இதன் மூலம், அடுத்த 10 ஆண்­டு­களில், இந்­தி­யாவில், தனி­நபர் உருக்கு பயன்­பாடு, உலக நாடு­க­ளுக்கு நிக­ராக உயரும்.
உல­க­ளவில், தற்­போ­தைய சூழலில், இந்­தியா தான் வேக­மாக வளர்ச்சி பெற்று வரு­கி­றது. அதனால், சீனா உள்­ளிட்ட நாடுகள், இந்­தி­யாவில் உருக்கு பொருட்­களை குவித்து வரு­கின்­றன. இதனால், உள்­நாட்டு உருக்கு துறைக்கு ஏற்­படும் பாதிப்பை தடுக்கும் வகையில், 173 வகை­யான உருக்கு பொருட்­க­ளுக்கு, குறைந்­த­பட்ச இறக்­கு­மதி வரி விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் விளை­வாக, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்­களில், உருக்கு இறக்­கு­மதி, முறையே, 15.5 மற்றும், 41 சத­வீதம் சரி­வ­டைந்­துள்­ளது. இது, உள்­நாட்டு உருக்கு நிறு­வ­னங்­களின் வர்த்­த­கத்தை ஊக்­கு­வித்­துள்­ளது. அதே­ச­மயம், உலக நாடு­களில், குறிப்­பாக சீனாவில், உருக்கு உற்­பத்தி திறன் அதி­க­ரித்து வரு­வ­தையும், உன்­னிப்­பாக கவ­னிக்க வேண்டும். இவ்­வாறு அவர் கூறி­யுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)