இந்­தி­யாவின் தனி­நபர் உருக்கு பயன்­பாடு உலக நாடு­க­ளுக்கு நிக­ராக உயரும்இந்­தி­யாவின் தனி­நபர் உருக்கு பயன்­பாடு உலக நாடு­க­ளுக்கு நிக­ராக உயரும் ... ரூபாயின் மதிப்பும் சரிவு – ரூ.67.42 ரூபாயின் மதிப்பும் சரிவு – ரூ.67.42 ...
மத்­திய அரசு அதிரடி அறிவிப்பு; முக்­கிய துறை­களில் 100 சத­வீத அன்­னிய முத­லீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2016
00:03

புது­டில்லி : மத்­திய அரசு, நேற்று அதி­ர­டி­யாக, அன்­னிய நேரடி முத­லீட்டு கொள்­கை­களை தளர்த்­தி­யது. விமானம், பாது­காப்பு உள்­ளிட்ட முக்­கிய துறை­களில் அன்­னிய நேரடி முத­லீடு, 100 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.
இதுகுறித்து, பிர­தமர் அலு­வ­லகம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: வேலை வாய்ப்­பு­களை அதி­க­ரித்து, புதிய தொழில்­களை உரு­வாக்கும் நோக்கில், அன்­னிய நேரடி முத­லீட்டு கொள்­கையில் சீர்­தி­ருத்­தங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. இதன்­படி, பாது­காப்பு, உள்­நாட்டு விமான போக்­கு­வ­ரத்து, மருந்து, ‘சிங்கிள்’ பிராண்டு சில்­லரை விற்­பனை, ஒளி­ப­ரப்பு உட்­பட, பல்­வேறு துறை­களில், அன்­னிய நேரடி முத­லீட்டு விதி­மு­றைகள் தளர்த்­தப்­பட்­டுள்­ளன. பெரும்­பான்­மை­யான துறை­களில், அரசு ஒப்­பு­த­லின்றி, ரிசர்வ் வங்கி விதி­முறைப்படி, அன்­னிய நிறு­வ­னங்கள் முத­லீடு செய்ய, தற்­போது அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம், அன்­னிய நிறு­வ­னங்கள், ஆர்­வத்­துடன் இந்­தி­யாவில் முத­லீடு செய்ய முன்­வரும்.
கடந்த, இரண்டு ஆண்­டு­களில், அன்­னிய நேரடி முத­லீட்டு கொள்­கை­களை, மத்­திய அரசு, இரண்­டா­வது முறை­யாக தளர்த்­தி­யுள்­ளது. இத்­த­கைய சீர்­தி­ருத்­தங்­களால், உல­க­ளவில், அன்­னிய முத­லீ­டு­க­ளுக்­காக, பொரு­ளா­தார வாசலை தாரா­ள­மாக திறந்து விட்­டுள்ள நாடாக, இந்­தியா உரு­வெ­டுத்­துள்­ளது. கடந்த, 2013–14ம் நிதி­யாண்டில், அன்­னிய நேரடி முத­லீடு, 3,604 கோடி டால­ராக இருந்­தது. இது, மத்­திய அரசின் நட­வ­டிக்­கை­களால், 2015 – 16ல், 5,546 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது. ஒரு நிதி­யாண்டில், இந்த அள­விற்கு அன்­னிய நேரடி முத­லீடு அதி­க­ரித்­துள்­ளது, இதுவே முதன்முறை­யாகும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.
முக்­கிய அம்­சங்கள்* பாது­காப்பு துறையில், சிறிய ஆயு­தங்கள், வெடி­ம­ருந்­துகள் தயா­ரிப்பு பிரி­வு­களில், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீட்­டிற்கு அனு­மதி* விமான நிலை­யங்­களின் விரி­வாக்க திட்­டங்­களில், அரசு ஒப்­பு­த­லின்றி, 100 சத­வீத முத­லீட்­டிற்கு அனு­மதி* விமான போக்­கு­வ­ரத்து துறையில், 100 சத­வீத முத­லீடு * மருந்து துறையில், விரி­வாக்க திட்­டங்­களில், நேர­டி­யாக, 74 சத­வீத முத­லீட்­டிற்கு அனு­மதி* ‘சிங்கிள்’ பிராண்டு சில்­லரை விற்­ப­னையில், நவீன தொழில்­நுட்ப தயா­ரிப்­பு­களை உள்­நாட்டில் கொள்­முதல் செய்­வ­தற்­கான விதி­முறை தளர்வு* கேபிள் நெட்ஒர்க், டி.டி.எச்., மொபைல் ‘டிவி’ துறை­களில், 100 சத­வீத முத­லீட்­டிற்கு அனு­மதி.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)