புதிய விமான நிலை­யங்­களால் ரியல் எஸ்டேட் தொழில் வளரும்புதிய விமான நிலை­யங்­களால் ரியல் எஸ்டேட் தொழில் வளரும் ... எப்.டி.ஐ., விதி­களை தளர்த்­தி­யதால் அமெ­ரிக்க நிறு­வ­னங்­களின் முத­லீடு ரூ.2.99 லட்சம் கோடியை தாண்டும் எப்.டி.ஐ., விதி­களை தளர்த்­தி­யதால் அமெ­ரிக்க நிறு­வ­னங்­களின் முத­லீடு ரூ.2.99 ... ...
புதிய முத­லீ­டு­களில் சுணக்க நிலை: வர்த்­தக கூட்­ட­மைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2016
01:03

புது­டில்லி : ‘நாட்டின் தொழில் துறையில் புதிய முத­லீ­டுகள் மேற்­கொள்­வதில் ஆர்வம் இல்­லாத சூழல் காணப்­ப­டு­கி­றது’ என, இந்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் துறை கூட்­ட­மைப்­பான – ‘பிக்கி’ தெரி­வித்­துள்­ளது.
இந்த அமைப்பு, இந்­தாண்டு, ஏப்., – செப்., வரை­யி­லான காலத்தில், பல்­வேறு துறை­களின் செயல்­பா­டுகள், எதிர்­பார்ப்­புகள் குறித்து, நிறுவனங்களிடம் ஆய்வு நடத்­தி­யது.
அதன் அடிப்­ப­டையில் பிக்கி வெளி­யிட்ட ஆய்­வ­றிக்கை விவரம்: ஆய்வில் கலந்து கொண்­டோரில், 64 சத­வீ­தத்­தினர், சர்­வ­தேச பொரு­ளா­தார நிலை கவ­லைக்­கு­ரி­ய­தாக உள்­ளது என, தெரி­வித்­துள்­ளனர். உல­க­ளவில், பொருட்­க­ளுக்­கான தேவை குறைந்­துள்­ள­தா­கவும், இந்த நிலை எப்­போதுமாறும் என, கூறு­வது கடி­ன­மாக உள்­ள­தா­கவும் தெரி­வித்­தனர்.இந்­திய தொழில் துறையில், புதிய முத­லீ­டுகள் குவிய வாய்ப்பு உள்­ள­தாக, 35 சத­வீ­தத்­தினர் மட்­டுமே கருத்து தெரி­வித்­துள்­ளனர். இது, முந்­தைய ஆய்வில், 41 சத­வீ­த­மாக இருந்­தது. முத­லீ­டு­களின் அளவில் எந்த மாற்­றமும் இருக்­காது என, 46 சத­வீதம் பேர் கூறி­யுள்­ளனர்.
கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக, தங்கள் துறை­களில் முத­லீ­டு­களை ஈர்க்கமேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­களின்பலன் இது­வரை தெரி­ய­வில்லை; இனி தான் தெரியும் என, பெரும்­பா­லானோர் கருத்து தெரி­வித்­துள்­ளனர். அதே­ச­மயம், ராணுவம் மற்றும் சாலைகள், நெடுஞ்­சா­லைகள், ரயில்வே,புதுப்­பிக்க எரி­சக்தி உள்­ளிட்ட துறை­களில், அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்கள் விறு­வி­றுப்­பாக நடை­பெற்று வரு­வ­தாக, பலர் கூறி­யுள்­ளனர். முந்­தைய அரை­யாண்­டுடன் ஒப்­பி­டும்­போது, நாட்டின் பொரு­ளா­தாரம், தொழில் மற்றும் நிறு­வன செயல்­பா­டு­களில், ஓர­ளவு முன்­னேற்றம் காணப்­ப­டு­கி­றது.
அதே­ச­மயம், விற்­பனை, ஏற்­று­மதி, வேலை­வாய்ப்பு ஆகி­ய­வற்றில் எந்த முன்­னேற்­றமும் இல்லை என, பெரும்­பா­லானோர் கூறி­யுள்­ளனர்.இத்­த­கைய மாறு­பட்ட கருத்­துகள் பதிவு செய்­யப்­பட்ட போதிலும், ஒட்­டு­ மொத்த அளவில், மதிப்­பீட்டு காலத்­திற்­கான தொழில் நம்­பிக்கை குறி­யீடு, 56.7லிருந்து, 64.3 புள்­ளி­க­ளாக உயர்ந்­துள்­ளது. இவ்­வாறு பிக்கி அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில், மத்­திய அரசு, தற்போது அன்­னிய நேரடி முத­லீட்டு கொள்­கை­களை மேலும் தளர்த்­தி­யுள்­ளதால், தொழில் துறை முத­லீ­டுகள் சூடு­பி­டிக்கும் என இத்துறை வல்­லு­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)