புதிய முத­லீ­டு­களில் சுணக்க நிலை: வர்த்­தக கூட்­ட­மைப்புபுதிய முத­லீ­டு­களில் சுணக்க நிலை: வர்த்­தக கூட்­ட­மைப்பு ... ரூபாயின் மதிப்பு சரிவு – ரூ.67.59 ரூபாயின் மதிப்பு சரிவு – ரூ.67.59 ...
எப்.டி.ஐ., விதி­களை தளர்த்­தி­யதால் அமெ­ரிக்க நிறு­வ­னங்­களின் முத­லீடு ரூ.2.99 லட்சம் கோடியை தாண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2016
01:03

புது­டில்லி : மத்­திய அரசு, கடந்த எட்டு மாதங்­களில், இரண்­டா­வது முறை­யாக, ‘எப்.டி.ஐ.,’ எனப்­படும் அன்­னிய நேரடி முத­லீ­டுகள் தொடர்­பான விதி­மு­றை­களை, நேற்று முன்­தினம் தளர்த்­தி­யது. இதன் மூலம், உல­க­ளவில் தாரா­ள­மான பொரு­ளா­தார சந்தை உள்ள நாடாக, இந்­தியா உரு­வெ­டுத்­துள்­ளது.
இதனால், ‘‘இந்­தி­யாவில், அமெ­ரிக்­காவின் முத­லீடு மேலும் அதி­க­ரிக்கும்,’’ என, அமெ­ரிக்க – இந்­திய வர்த்­தக குழு தலைவர் முகேஷ் அகி தெரி­வித்­துள்ளார்.
மருந்து நிறுவனங்கள்அவர் மேலும் கூறி­ய­தா­வது: சமீ­பத்தில், பிர­தமர் மோடி, அமெ­ரிக்கா சென்ற போது, அமேசான், ஸ்டார் இந்­தியா உள்­ளிட்ட நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில் 2.99 லட்சம் கோடி ரூபாய் முத­லீடு செய்ய உள்­ள­தாக தெரி­வித்­தன. தற்­போது எப்.டி.ஐ., விதி­மு­றைகள் மேலும் தளர்த்­தப்­பட்­டுள்­ளதால், அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் ஏற்க­னவே அறி­வித்த முத­லீ­டு­களை ஒரு துவக்­க­மா­கத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை­விட அதி­க­மாக முத­லீ­டுகள் குவிய வாய்ப்­புள்­ளது.
குறிப்­பாக, மருந்து நிறு­வ­னங்­களின் விரி­வாக்கத் திட்­டங்­களில், நேர­டி­யாக முத­லீடு செய்­வ­தற்­கான வரம்பு, 74 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ளதும், அதற்கு மேல், அரசு அனு­ம­தி­யுடன், 100 சத­வீதம் முத­லீடு செய்­யலாம் என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளதும் பாராட்­டத்­தக்­கது. இதனால், மருந்து துறையில், அமெ­ரிக்க நிறு­வ­னங்­களின் முத­லீடு மேலும் அதி­க­ரிக்கும்.
அது­போல, பாது­காப்பு, உள்­நாட்டு விமான போக்­கு­வ­ரத்து, ஒளி­ப­ரப்பு சேவைகள் உள்­ளிட்ட துறை­க­ளிலும், எப்.டி.ஐ., விதி­களை தளர்த்­தி­யுள்­ளதால், அத்­து­றை­களில், அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் ஆர்­வத்­துடன் முத­லீடு செய்ய முன்­வரும். ஸ்திர­மற்ற உலகப் பொரு­ளா­தார சூழ­லிலும், இந்­தியா தான் தொடர்ந்து, அன்­னிய முத­லீ­டு­களை அதிக அளவில் ஈர்த்து வரு­கி­றது. இரு ஆண்­டு­க­ளுக்கு முன், இந்­திய பிர­த­ம­ராக மோடி பத­வி­யேற்­றது முதல், நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில், குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது.
வேலைவாய்ப்புகள்அடிப்­படை கட்­ட­மைப்பு துறையில் முத­லீ­டு­களை அதி­க­ரிக்­கவும், எப்.டி.ஐ., குவி­யவும், சிவப்பு நாடா முறையை கட்­டுப்­ப­டுத்­தவும், மத்­திய அரசு மேற்­கொண்டு வரும் சீர்­தி­ருத்த திட்­டங்கள் துணை­பு­ரி­கின்­றன. திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட திவால் சட்­டமும், அன்­னிய நிறு­வ­னங்­களின் முத­லீ­டு­களை பெரு­ம­ளவில் ஈர்க்க உதவும்.உள்­நாட்டில், வேலை­வாய்ப்பை பெருக்­கவும், பரஸ்­பர தொழில்­நுட்ப பரி­மாற்­றங்­களை ஊக்­கு­விக்­கவும், மத்­திய அரசின் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கைகள் துணை புரிந்து வரு­கின்­றன. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)