பதிவு செய்த நாள்
22 ஜூன்2016
11:40
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 2 வாரத்தில் கடலைப்பருப்பு (100 கிலோ)மூடைக்கு ரூ. 2 ஆயிரம் அதிகரித்து விற்பனையானது. திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு தினமும் உள்ளூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு வகைகள் விற்பனைக்கு வருகின்றன. இதில் கடலைப்பருப்பு மட்டும் 2 டன் வரை விற்பனைக்கு வரும். சில மாதங்களாகவே பருப்புகளின் விலை ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது. இதில் வரத்து அதிகரித்திருந்த கடலைப் பருப்பு ஒரு கிலோ ரூ.75 முதல் ரூ.78 வரை விற்பனையானது.
இந்நிலையில், சென்ற மாதம் திடீரென வரத்து குறைவு மற்றும் போக்குவரத்து செலவுகளால் கடலைப்பருப்பு விலை அதிகரித்தது. இதனால் 100 கிலோ மூடை ரூ.7600 ல் இருந்து ரூ.8500 ஆக மூடைக்கு ரூ.900ம் வரை அதிகரித்தது. இதற்கிடையில் விலை அதிகரித்த 2 வாரங்களில் நேற்று முன்தினமும் மீண்டும் கடலைப்பருப்பு மூடை விலை மேலும் ரூ.ஆயிரம் அதிகரித்தது. 100 கிலோ மூடை ரூ.8500 ல் இருந்து ரூ.9500 ஆக விலை அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ கடலைப்பருப்பு ரூ.85-ல் இருந்து, ரூ.95 ஆக விலை அதிகரித்து விற்பனையானது.
இதே போல், துவரம்பருப்பு ரூ.120,பாசிப் பருப்பு ரூ.130, உருட்டுப்பருப்பு ரூ.170, சுண்டல் ரூ.60, வெள்ளைச்சுண்டல் ரூ.65க்கும் விற்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|