இரண்டு வாரத்தில் கடலைப்பருப்பு மூடைக்கு ரூ. 2 ஆயிரம் அதிகரிப்புஇரண்டு வாரத்தில் கடலைப்பருப்பு மூடைக்கு ரூ. 2 ஆயிரம் அதிகரிப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 சரிவு ...
தக்காளி விலை தொடர் சரிவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2016
11:40

நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், விலையை அதிகரித்து விற்பனை செய்வதற்காக, தக்காளி பதுக்கல் அதிகரித்தது. இதனால், தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன், ஒரு கிலோ தக்காளி, 100 ரூபாய்க்கு எகிறியது. தக்காளி பதுக்கலை கண்காணிக்க, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால், பதுக்கல் குறைந்து, வெளிச்சந்தைக்கு தக்காளி வரத்து துவங்கியது. விலையும், ஒவ்வொரு நாளும் கிலோவுக்கு, 10 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை சரிய துவங்கியது. சில நாட்களுக்கு முன், கிலோ, 50 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிலோ தக்காளி, சில்லரை விலையில், 40 ரூபாய்க்கு சரிந்தது. அனைத்து நகரங்களிலும், தக்காளி இதே விலையில் இருந்தது. அடுத்த மாத துவக்கத்தில், ரம்ஜான் பண்டிகை வருகிறது. பண்டிகை முடிந்ததும், தக்காளி விலை மேலும் சரியும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)