பதிவு செய்த நாள்
22 ஜூன்2016
11:40
நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், விலையை அதிகரித்து விற்பனை செய்வதற்காக, தக்காளி பதுக்கல் அதிகரித்தது. இதனால், தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன், ஒரு கிலோ தக்காளி, 100 ரூபாய்க்கு எகிறியது. தக்காளி பதுக்கலை கண்காணிக்க, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால், பதுக்கல் குறைந்து, வெளிச்சந்தைக்கு தக்காளி வரத்து துவங்கியது. விலையும், ஒவ்வொரு நாளும் கிலோவுக்கு, 10 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை சரிய துவங்கியது. சில நாட்களுக்கு முன், கிலோ, 50 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிலோ தக்காளி, சில்லரை விலையில், 40 ரூபாய்க்கு சரிந்தது. அனைத்து நகரங்களிலும், தக்காளி இதே விலையில் இருந்தது. அடுத்த மாத துவக்கத்தில், ரம்ஜான் பண்டிகை வருகிறது. பண்டிகை முடிந்ததும், தக்காளி விலை மேலும் சரியும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|