பதிவு செய்த நாள்
23 ஜூன்2016
04:47
மும்பை : ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து, பிரிட்டனில் இன்று பொது ஓட்டெடுப்பு நடைபெறுகிறது.
இதில், 28 நாடுகளைக் கொண்ட, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற, பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், அது, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்; அன்னியச் செலாவணி மதிப்பிலும், ஏற்றத்தாழ்வு உண்டாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பியநாடுகளுடனான, இந்தியாவின் பரஸ்பர வர்த்தகம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. ஐரோப்பிய நிறுவனங்கள், அதிக அளவில் இந்தியாவில் முதலீடு மேற்கொண்டு உள்ளன. அதனால், பிரிட்டன் எடுக்கும் முடிவு, இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிரிட்டன் எடுக்கும் முடிவு குறித்து தீர்மானிக்க முடியாத சூழலில், இந்தியா உள்ளிட்ட உலக நிதிச் சந்தைகளில், சிறிது சலசலப்பு காணப்படுகிறது. இவ்விவகாரத்தை, ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. நிதிச் சந்தையில் ஏற்படும் எத்தகைய தாக்கத்தையும் சமாளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறினால், அதை பின்பற்றி மேலும் பல நாடுகள் வெளியேறலாம். இது, சர்வதேச நிதிச் சந்தையில் சங்கிலித் தொடர் தாக்கத்தை ஏற்படுத்தும் என, பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|