பதிவு செய்த நாள்
23 ஜூன்2016
04:48
புதுடில்லி : மாஸ்டர் கார்டு, இந்தியாவில், அடுத்த நான்கு ஆண்டுகளில், 80 கோடி டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்நிறுவனம், பண பரிவர்த்தனைக்கான கடன் அட்டை துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிதி சேவையை, 20 நாடுகளில் உள்ள, 55 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். மாஸ்டர் கார்டு, இந்தியாவில், 2020ம் ஆண்டுக்குள், 70 – 80 கோடி டாலர் அளவுக்கு, முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில், மின்னணு பண பரிமாற்ற சேவை, 5 சதவீதத்திற்கு கீழ் உள்ளது. வரும் காலத்தில், பலர் இந்த சேவைக்கு மாற உள்ளனர். இதற்காக, எங்கள் நிறுவனம், நவீன தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம், எங்கள் நிதி சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 2020ல், 50 கோடியாக உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|