பதிவு செய்த நாள்
23 ஜூன்2016
04:49
புதுடில்லி : பியூச்சர் குரூப் நிறுவனம், தவணை முறையில் பணம் செலுத்தி பொருட்களை வாங்குவதற்காக, பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைகிறது. இதற்காக தனியாக ஸ்டோர் கிரெடிட் கார்டு ஒன்றையும் அறிமுகம் செய்கிறது.இதுகுறித்து, பியூச்சர் குரூப் தலைமை செயல் அதிகாரி கிஷோர் பியானி கூறியதாவது: எங்களது ஸ்டோர்கள் மூலமாக, ஒரு கோடி பேர், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கு கின்றனர். ஸ்டோர் கிரெடிட் கார்டு மூலம் வாடிக்கையாளர்கள், உடைகளிலிருந்து மளிகைப் பொருட்கள் வரை தவணை முறையில் பணம் செலுத்தி வாங்க முடியும். குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து, மூன்று லட்சம் ரூபாய் வரை, பொருட்களை வாங்கலாம். மேலும் தவணையை திருப்பிச் செலுத்தும் கால அவகாசம், மூன்று மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை தரவிருக்கிறோம். இன்னும், 45 நாட்களில் கோ பிராண்டட் கார்டு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|