பதிவு செய்த நாள்
23 ஜூன்2016
04:50
ஐதராபாத் : ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம், விசாகப்பட்டினத்தில் புதிதாக பெயின்ட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்க உள்ளது. இது தொடர்பாக, ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம், ஆந்திர மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளது. இதன் மூலம், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், புடி என்ற கிராமத்தில், பெயின்ட் தயாரிக்கும் தொழிற்சாலையை இந்நிறுவனம் அமைக்க உள்ளது.இந்த ஆலை, ஆண்டுக்கு, ஐந்து லட்சம் கிலோ லிட்டர் பெயின்ட் தயாரிக்கும் திறன் உடையதாக இருக்கும். இதற்காக, 1,785 கோடி ரூபாய் முதலீடு செய்யவும், ஏசியன் பெயின்ட்ஸ் திட்டமிட்டு உள்ளது. ஆந்திராவில், ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளதன் மூலம், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்திற்கு, மதிப்பு கூட்டு வரி மற்றும், மாநில சரக்கு மற்றும் சேவை வரிகளில் சலுகைகளை வழங்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|