பதிவு செய்த நாள்
23 ஜூன்2016
04:51
புதுடில்லி : சிறிய மற்றும் நடுத்தர பிரிவைச் சேர்ந்த, 33 நிறுவனங்கள், பங்கு வெளியிட்டு, நிதி திரட்ட முடிவு செய்து உள்ளன. பெரிய தொழில் நிறுவனங்கள், புதிய மற்றும் விரிவாக்க திட்டத்திற்கு தேவையான நிதியை, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், பங்குகளை வெளியிட்டு திரட்டி கொள்கின்றன.கடந்த, 2012 மார்ச் மாதம், மும்பை பங்குச் சந்தையில், எஸ்.எம்.இ., பிரிவின் கீழ், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்டி கொள்ள அனுமதிக்கப்பட்டது.இதுவரை, சிறிய மற்றும் நடுத்தர பிரிவில், 139 நிறுவனங்கள், பங்குகளை வெளியிட்டு, 10 ஆயிரத்து, 126.35 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளன. இந்த நிலையில், திரே என்டர்டெயின்மென்ட், மோனார்க் அப்பேரல்ஸ் உள்ளிட்ட, 33 சிறிய நிறுவனங்கள், மும்பை பங்குச்சந்தையில், எஸ்.எம்.இ., பிரிவில், பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட முடிவு செய்துள்ளன. இந்த நிதியை, அந்த நிறுவனங்கள், நடைமுறை மூலதனத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|