ரூ.100 கோடி முத­லீட்டில் போர்ஸ் மோட்டார்ஸ் ஆலைரூ.100 கோடி முத­லீட்டில் போர்ஸ் மோட்டார்ஸ் ஆலை ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிந்தது தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிந்தது ...
வாசலை பூட்­டிய வங்­கிகள்; மறு­கடன் வாங்க முடி­யாமல் தவிக்கும் 240 கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2016
04:52

புது­டில்லி : ‘வங்­கி­களின் தயக்­கத்தால், 240 கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள், பழைய கடனை சீர­மைத்து, மறு­கடன் வாங்க முடி­யாத நிலையில் உள்­ளன’ என, இந்­தியா ரேட்டிங்ஸ் நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விவரம்:இந்­தி­யாவில், 500 கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் கடன் குறித்து, ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. அவை வாங்­கி­யுள்ள, 11.80 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையில், ஏற்­க­னவே கடன் வாங்கி, ஒழுங்­காக திரும்பச் செலுத்­தாமல், மறு­சீ­ர­மைக்­கப்­பட்ட கடன், 5.10 லட்சம் கோடி ரூபா­யாக உள்­ளது.
வங்கிகளின் எண்ணம்எஞ்­சி­யுள்ள, 6.70 லட்சம் கோடி ரூபாய் கடனை, மறு­சீ­ர­மைத்து, புதிய கட­னாக மாற்­று­வது, அபா­ய­க­ர­மான நட­வ­டிக்­கை­யாக இருக்கும் என, வங்­கிகள் கரு­து­கின்­றன. அதனால், அக்­க­டன்­களை மறு­சீ­ர­மைக்க வங்­கிகள் முன்­வ­ராமல் உள்­ளன. இந்த வகையில், 240 நிறு­வ­னங்கள், மறு­கடன் பெற முடி­யாத நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளன. நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்­டிற்குள், 100 நிறு­வ­னங்கள், 1.70 லட்சம் கோடி ரூபாய் அள­வி­லான கடன்­களை மறு­சீ­ர­மைக்க வேண்டும். அதில், 39 நிறு­வ­னங்­களின், 52,700 கோடி ரூபாய் கடன், ஏற்­க­னவே மறு­சீ­ர­மைக்­கப்­பட்ட கடன் பிரிவில் உள்­ளன.
கடனை மறு­சீ­ர­மைத்து மீண்டும் கடன் வழங்­கினால், இடர்ப்­பாடு ஏற்­ப­டலாம் என்ற பிரிவில், 33 நிறு­வ­னங்­களின், 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்­ளது. இந்த வகையில், ஜெய­பி­ரகாஷ் அசோ­சியேட்ஸ் நிறு­வனம், ஏற்­க­னவே சீர­மைக்­கப்­பட்ட கடன்­க­ளு­டனும், ஜி.எம்.ஆர்., இன்ப்­ராஸ்ட்­ரக்சர் நிறு­வனம், இடர்ப்­பா­டுள்ள மறு­கடன் பிரி­விலும் இடம் பெற்­றுள்­ளன. இந்த இரு பிரி­விற்கும் இடைப்­பட்ட நிலையில், அதா­வது, மறு­கடன் வழங்­கு­வதில், சரி­பாதி சாதக, பாதக அம்­சங்­களைக் கொண்­ட­தாக, வேதாந்தா நிறு­வனம் உள்­ளது.
ஒன்பது துறைகள்கடன்­களை மறு­சீ­ர­மைக்க தேவை­யான மொத்த தொகையில், ஒன்­பது துறை­களின் பங்கு, 76 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மாக உள்­ளது.இதில், உலோகம் மற்றும் சுரங்கத் துறை, 15 சத­வீ­தத்­துடன் முத­லி­டத்தில் உள்­ளது. அடுத்து, அடிப்­படை கட்­ட­மைப்பு மற்றும் கட்­டு­மானம், 13 சத­வீதம்; சிமென்ட், 10; மின்­சாரம், 9; தொலைத்­தொ­டர்பு, 9; கப்பல், 7; ரியல் எஸ்டேட், 6; ஜவுளி மற்றும் சர்க்­கரை துறைகள் தலா, 4 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டுள்­ளன. இவ்­வாறு அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
ஒரு நிறு­வ­னத்தின் வாராக்கடனை, வங்­கிகள் மறு­சீ­ர­மைத்து, மறு­ப­டியும் கடன் வழங்­கு­கின்­றன. இந்த மறு­கடன், புதிய வட்டி விகி­தத்தில், குறைந்த தவணைத் தொகை­யுடன், நீண்ட முதிர்வு காலத்தை கொண்­ட­தாக இருக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)