பதிவு செய்த நாள்
28 ஜூன்2016
07:08
புதுடில்லி : ‘பேடிஎம்’ நிறுவனம், இணையதள வசதி இல்லாமல், அதன் ‘ஆப்’ எனப்படும், செயலியை பயன்படுத்தும் சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. பேடிஎம் நிறுவனத்தின், ‘ஆப்’ மூலம், மொபைல் போன் ரீசார்ஜ், டி.டி.எச்., ரீசார்ஜ், பண பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளை, வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றனர். தற்போது, இந்த நிறுவனத்திற்கு, 12 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதை, 2020ம் ஆண்டிற்குள், 50 கோடியாக அதிகரிக்க, இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. பேடிஎம் ஆப் சேவையை பெறுவதற்கு, மொபைல் போனில், இணையதள வசதி இருக்க வேண்டும். இந்த நிலையில், இணைய வசதி இல்லாமல், மொபைல் ஆப் சேவை வழங்க, பேடிஎம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இணையதளவசதி இல்லாமல், ‘ஆப்’ பயன்படுத்துவதற்கு, ‘பார்கோடு அல்லது, ‘ஒன் டைம் பாஸ்வோர்ட்’ மூலம், சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|