பதிவு செய்த நாள்
28 ஜூன்2016
07:09
புதுடில்லி : கடல் மார்க்கமாக நிலக்கரி, சிமென்ட் உள்ளிட்ட சரக்கு பொருட்களை அனுப்புவதன் மூலம் ஆண்டுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்க வாய்ப்பு உள்ளதாக, மத்திய அரசு மதிப்பிட்டு உள்ளது. இந்தியாவில், 7,500 கி.மீ., நீளத்திற்கு கடல் வழி பாதையும், உள்நாட்டிற்குள், 14 ஆயிரத்து, 500 கி.மீ., நீளத்திற்கு நீர் வழித்தடமும் உள்ளது. இதையடுத்து மத்திய அரசு, கடல் மற்றும் நீர் வழித்தட போக்குவரத்தை ஊக்குவிக்க, சாகர்மாலா என்ற திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த நிலையில், அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நிலக்கரியை, கடல் மார்க்கம் வழியாக அனுப்புவதன் மூலம், ஆண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய்; உருக்கு பொருட்கள் மூலம், 5,500 கோடி ரூபாய்; சிமென்ட் மூலம், 4,000 கோடி ரூபாய் உட்பட சேமிக்க வாய்ப்பு உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|