பதிவு செய்த நாள்
28 ஜூன்2016
07:10
புதுடில்லி : ஏசியன் பெயின்ட்ஸ், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், இரண்டு தொழிற்சாலைகளை அமைக்க முடிவு செய்துள்ளது. ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்திற்கு, ஹரியானா மாநிலம் – ரோடாக்; குஜராத் – அங்லேஸ்வர்; உ.பி., – காஸ்னா ஆகிய இடங்களில், பெயின்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இதில், ரோடாக் ஆலையின் திறனை, ஆண்டுக்கு, 2 லட்சம் கிலோ லிட்டரில் இருந்து, நான்கு லட்சம் கிலோ லிட்டராக உயர்த்தி உள்ளது. அங்லேஸ்வர் மற்றும் காஸ்னா ஆலைகளில், கடந்த ஆண்டு புனரமைப்பு பணி செய்தது. தற்போது, ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில், 1,750 கோடி ரூபாய் முதலீட்டில், ஆண்டுக்கு, நான்கு லட்சம் கிலோ லிட்டர் தயாரிக்கும் திறன் உடைய ஆலையும்; மைசூரில், 2,300 கோடி ரூபாய் முதலீட்டில், ஆண்டுக்கு, ஆறு லட்சம் கிலோ லிட்டர் தயாரிக்கும் திறன் உடைய ஆலையும் அமைக்க திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|