பதிவு செய்த நாள்
28 ஜூன்2016
07:11
மும்பை : நாட்டின் மிகப்பெரிய பங்குச்சந்தையாக, ‘என்.எஸ்.இ.,’ எனப்படும், தேசிய பங்குச்சந்தை திகழ்கிறது. இந்நிலையில், பங்கு வெளியீட்டில் களமிறங்க முடிவு செய்துள்ள, என்.எஸ்.இ., அதற்கான ஆவணங்களை, 2017, ஜனவரியில், தாக்கல் செய்ய உள்ளதாக, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம், தெரிவித்துள்ளது.பங்கு வெளியிட்டிற்கு பின், பங்குகளை, தனக்கு போட்டியாக உள்ள, மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட, என்.எஸ்.இ., விரும்பவில்லை. அதனால், பங்குகளை, தன் பங்குச்சந்தையிலே பட்டியலிடவோ அல்லது, பங்கு வர்த்தகத்தை நேரடியாக, ‘செபி’யின் கண்காணிப்பில் மேற்கொள்ளவோ, என்.எஸ்.இ., விரும்புகிறது. இதற்கு, ‘செபி’ விதிமுறைகளில் இடமில்லை என்பதால், இப்பிரச்னை, பங்கு வட்டாரத்தில் ஆர்வத்தை எழுப்பியுள்ளது.அடுத்த ஆண்டு ஏப்ரலில், அயல்நாட்டு பங்குச்சந்தைகளிலும், பங்குகளை பட்டியலிட, என்.எஸ்.இ., இயக்குனர் குழு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|