பதிவு செய்த நாள்
28 ஜூன்2016
07:12
புதுடில்லி : மத்திய வர்த்தக துறை செயலர் ரீடா தியோதியா கூறியதாவது:மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், ஏற்றுமதியில் ஏற்பட்டு வந்த வீழ்ச்சி, கடந்த மே மாதம், மெல்ல கட்டுக்குள் வந்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு, 3 சதவீத மானியம், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தளர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளால், இது சாத்தியமாகி உள்ளது. குறிப்பாக, பொறியியல் சாதனங்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஆகிய துறைகள், வளர்ச்சிப் பாதைக்கு திரும்பிஉள்ளன. கடந்த மே மாதம், பொறியியல் துறை ஏற்றுமதி வளர்ச்சி, 2.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 24.34 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இது துவக்கம் தான், வரும் மாதங்களில் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும். கடந்த மே மாதம், மருந்து துறையின் ஏற்றுமதி குறைந்துள்ளது. இதற்கு, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் காணப்படும் ஸ்திரமற்ற அரசியல்தான் காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|