பதிவு செய்த நாள்
29 ஜூன்2016
07:31
புதுடில்லி : இந்துஜா லேலாண்ட், சி.எல்., எஜூகேட் நிறுவனங்கள் பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட, ‘செபி’ ஒப்புதல் தெரிவித்து உள்ளது. அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனம், இந்துஜா லேலாண்ட் பைனான்ஸ். இந்த நிறுவனம், நிதி சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்துஜா லேலாண்ட் பைனான்ஸ் மற்றும் சி.எல்., எஜூகேட், பங்கு சந்தைகளில், பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட அனுமதி அளிக்குமாறு, ‘செபி’யிடம் விண்ணப்பித்து இருந்தன. இந்த இரண்டு நிறுவனங்களும் பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்டி கொள்ள, ‘செபி’ ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து, இந்துஜா பைனான்ஸ், 26.60 கோடி பங்குகளையும், சி.எல்., எஜூகேட், 40.90 லட்சம் பங்குகளையும் வெளியிட முடிவு செய்து உள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கு வெளியீடும், மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட இருக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|