பதிவு செய்த நாள்
30 ஜூன்2016
01:45
புதுடில்லி : சிறிய மற்றும் நடுத்தர பிரிவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள், பங்கு வெளியீட்டின் மூலம், 17 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளன. தொழில் நிறுவனங்கள், தங்களுக்கு தேவைப்படும் நிதியை, பங்குச்சந்தைகளில், பங்குகளை வெளியிட்டு திரட்டி கொள்கின்றன. அதன்படி, சிறிய மற்றும் நடுத்தர பிரிவைச் சேர்ந்த, ‘குவாலிட்டி பார்மாசூடிக்கல்ஸ், டைட்டானியம் டென் என்டர்பிரைசஸ், கமர்ஷியல் சைன்பேக்ஸ்’ ஆகிய நிறுவனங்கள், இன்று, மும்பை பங்குச்சந்தையில், பங்குகளை வெளியிட உள்ளன. இதன் மூலம், குவாலிட்டி, 6.21 கோடி ரூபாய்; டைட்டானியம் டென் என்டர்பிரைசஸ், 7.66 கோடி ரூபாய்; கமர்ஷியல் சைன்பேக்ஸ், 2.72 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளன. கடந்த, 2012 மார்ச் மாதம் முதல், இதுவரை, சிறிய மற்றும் நடுத்தர பிரிவில், 140 நிறுவனங்கள், பங்குச்சந்தைகளில் பட்டியலிட்டு, 10 ஆயிரத்து, 169 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|