பதிவு செய்த நாள்
30 ஜூன்2016
01:46
புதுடில்லி : ஐ.டி.சி., நிறுவனம், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், புதிதாக தொழிற்சாலைகள் அமைக்க முடிவு செய்து உள்ளது. ஐ.டி.சி., நிறுவனம், புகையிலை, ஓட்டல், உணவு பொருட்கள் தயாரிப்பு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இதில், உணவு பொருட்கள் தயாரிப்பு பிரிவு சார்பில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய தொழிற்சாலைகள் அமைக்க முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து, ஐ.டி.சி., நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2015 – 16ம் ஆண்டில், எங்களின் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களின் விற்றுமுதல், 7,097 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. ஐ.டி.சி., குழுமத்திற்கு, புகையிலைக்கு அடுத்தபடியாக, உணவு பொருட்கள் பிரிவில் இருந்து தான் அதிக வருவாய் கிடைக்கிறது. எனவே, உணவு பொருட்கள் தயாரிப்பை அதிகரிக்க, 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய தொழிற்சாலைகள் அமைக்கவிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|