பதிவு செய்த நாள்
30 ஜூன்2016
01:48
புதுடில்லி : இந்தியாவில், பர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை, 20 லட்சமாக குறைந்து உள்ளதாக, ‘கார்ட்னர்’ ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. கார்ட்னர் ஆய்வு நிறுவனம், நடப்பாண்டில், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், ‘டேப்லெட், லேப் – டாப்’ உள்ளடக்கிய தனிநபர் கம்ப்யூட்டர் விற்பனை குறித்து ஆய்வு நடத்தியது. அந்த காலாண்டில், 20 லட்சம் தனிநபர் கம்ப்யூட்டர் விற்பனையாகி உள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலாண்டை விட, 7.4 சதவீதம் குறைவாகும். கடந்த காலாண்டில், தனிநபர் கம்ப்யூட்டர் விற்பனையில், எச்.பி., நிறுவனத்தின் சந்தை பங்கு, 25 சதவீதம்; டெல், 23.5 சதவீதம்; லெனோவா, 19.4 சதவீதம் என்றளவில் உள்ளது. கம்ப்யூட்டர் விற்பனையை பொறுத்தவரை, 2016ம் ஆண்டின் முதல் காலாண்டில், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இரண்டு பிரிவிலுமே சரிவை சந்தித்திருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|