பதிவு செய்த நாள்
30 ஜூன்2016
01:49
கொழும்பு : இலங்கை வெளியுறவு துணை அமைச்சர் ஹர்ஷா டி சில்வா கூறியதாவது: இந்தியா உடனான வர்த்தகத்தை அதிகரிக்க உதவும், இ.டி.சி.ஏ., எனப்படும், பொருளாதார, தொழில்நுட்ப கூட்டுறவு ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க, இலங்கை தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதுபோல, சீனா உடன், தாராள வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடனும், இதுபோன்ற ஒப்பந்தம் கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதால், இலங்கையின் ஏற்றுமதி பாதிக்கப்படும். அதை கருத்தில் கொண்டு, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களை விரைவாக இறுதி செய்ய, இலங்கை விரும்புகிறது. இது, முழுக்க முழுக்க, இலங்கை நலன் சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார். இந்தியா உடன் மேற்கொள்ள உள்ள ஒப்பந்தத்திற்கு, இலங்கை எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|