பதிவு செய்த நாள்
30 ஜூன்2016
01:51
புதுடில்லி : இந்தியாவில், நடப்பாண்டில் சிமென்ட் தேவை, இரு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, டால்மியா பாரத் நிறுவனம் மதிப்பீடு செய்து உள்ளது. டால்மியா பாரத், சிமென்ட் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு, ஆண்டுக்கு, 2.50 கோடி டன் சிமென்ட் தயாரிக்கும் திறனுடைய ஆலைகள் உள்ளன. டால்மியா, தெற்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில், அதிகளவில், சிமென்ட் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில், கட்டுமான துறை வேகமாக வளர்ச்சி கண்டு வருவதால், சிமென்ட் தேவை, இரு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, டால்மியா மதிப்பீடு செய்துள்ளது.இதுகுறித்து, டால்மியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில், அடிப்படை கட்டுமான துறை சிறப்பாக வளர்ச்சி காணும் என, தெரியவந்துள்ளது. இதனால், முதல் காலாண்டில், சிமென்ட் விற்பனை, 5 சதவீதம் வளர்ச்சி கண்டது. இந்த வளர்ச்சி, ஆண்டு இறுதியில், 78 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|