பணம் கறப்­பதில் மொபைல் போன் சேவை­யா­ளர்கள் முத­லிடம்பணம் கறப்­பதில் மொபைல் போன் சேவை­யா­ளர்கள் முத­லிடம் ... ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு – ரூ.67.57 ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு – ரூ.67.57 ...
மத்­திய அரசின் ஊக்­கத்தால் நாட்டின் ஜவுளி துறை ஏற்­று­மதி ரூ.1.33 லட்சம் கோடி­யாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2016
01:54

புது­டில்லி : ‘‘மத்­திய அரசின் முயற்­சியால், நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டில், நாட்டின் ஜவுளி துறை ஏற்­று­மதி, 1.33 லட்சம் கோடி ரூபா­யாக உயரும்,’’ என, இந்­திய ஜவுளி தயா­ரிப்­பா­ளர்கள் சங்­க­மான – சி.எம்.ஏ.ஐ.,யின் தலைவர் ராகுல் மேத்தா தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது: ‘மூலப்­பொ­ருட்­க­ளுக்­கான இறக்­கு­மதி வரியை, திரும்ப வழங்­கும்­போது, மாநில அர­சு­க­ளுக்கு செலுத்­தப்­பட்ட வரி­யையும் கணக்­கிட வேண்டும்’ என, மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது. இது, ஜவுளி துறை ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு மிகப்பெரிய நிவா­ர­ணத்தை அளித்­துள்­ளது.
சிறப்பு ஊக்கத் திட்டம் அடுத்த மூன்று ஆண்­டு­களில், ஜவுளி துறையில், ஒரு கோடி புதிய வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கவும், 73,150 கோடி ரூபாய் முத­லீ­டு­களை ஈர்த்து, ஏற்­று­ம­தியை, இரண்டு லட்சம் கோடி ரூபாய் அள­விற்கு உயர்த்­தவும், மத்­திய அரசு திட்­ட­மிட்­டு உள்­ளது. இதற்­காக, 6,000 கோடி ரூபாய்க்கு, சிறப்பு ஊக்கத் திட்டம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறைக்­கான, இந்த சிறப்பு ஊக்கத் திட்­டத்­திற்கு, கடந்த வாரம், மத்­திய அமைச்­ச­ரவைக் குழு ஒப்­புதல் வழங்­கி­யுள்­ளது. இது­போன்ற நட­வ­டிக்­கை­களால், ஜவுளி துறையில், மிக அதிக அள­வி­லான முத­லீ­டுகள் குவியும் என்­ப­துடன், உற்­பத்தி திறனும் அதி­க­ரிக்கும்.
இதை­ய­டுத்து, தற்­போது, 1.12 லட்சம் கோடி ரூபா­யாக உள்ள, ஜவுளி துறையின் ஏற்­று­மதி, நடப்பு நிதி­யாண்டில், 1.33 லட்சம் கோடி ரூபா­யாக உயரும் என,மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதே­ச­மயம், சர்­வ­தேச பொரு­ளா­தார மந்­த­நிலை, இந்­திய ஜவுளி துறையை பாதித்­துள்­ளது என்­ப­தையும் மறுப்­ப­தற்கு இல்லை. இதனால், நடப்பு ஜூன் வரை­யி­லான காலாண்டில், ஜவுளி துறை ஏற்­று­மதி, 5 சத­வீதம் குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. உள்­நாட்டு நில­வ­ரமும் மந்­த­மாக உள்­ளதால், ஜவுளி துறை வளர்ச்சி, ஏற்ற இறக்­க­மின்றி, நிலை­யா­கவோ அல்­லது பயன்­பாடு, 2 சத­வீதம் குறைந்தோ காணப்­படும்.
பிரிட்டன் விவ­காரம் பிரிட்டன் விவ­காரம், இந்­திய ஜவுளி துறைக்கு உட­ன­டி­யாக எந்­த­வி­த­மான பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தாது. அது, பிரிட்டன், ஐரோப்­பிய கூட்­ட­மைப்­புடன் செய்து கொள்ளும் வரி சார்ந்த ஒப்­பந்­தங்­களின் அடிப்­ப­டையில் இருக்கும். பிரிட்டன் வில­கு­வதால், இந்­தியா – ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு இடை­யி­லான, தாராள வர்த்­தக ஒப்­பந்தம் கையெ­ழுத்­தா­வது தாம­தப்­படும். ஒப்­பந்­தத்தை விரைந்து மேற்­கொள்ள, மத்­திய அரசு முயற்சி மேற்­கொள்ள வேண்டும். இவ்­வாறு அவர் கூறினார்.
ஈரான் ஆயத்த ஆடைகள் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய். இதில், 60 சத­வீதம், இறக்­கு­மதி மூலம் பூர்த்தி செய்­யப்­ப­டு­கி­றது. இது, இந்­திய ஆயத்த ஆடை ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, சாத­க­மான அம்­ச­மாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)