பதிவு செய்த நாள்
30 ஜூன்2016
10:33
மும்பை : பிரிக்ஸிட் பாதிப்பிலிருந்து பிரிட்டன் உள்ள ஐரோப்பிய பங்குச்சந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டு வரும் வேளையில் இந்திய பங்குச்சந்தைகளும் கடந்த இருதினங்களாக உயர்வுடன் இருந்த நிலையில் அந்த உயர்வு இன்றும் தொடர்ந்தது.
இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றத்துடன் துவங்கின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 240.72 புள்ளிகள் உயர்ந்து 26,981.11-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 64.60 புள்ளிகள் உயர்ந்து 8,268.60-ஆகவும் இருந்தன.
7-வது ஊதிய குழு உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது, ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வுடன் இருப்பது, ஜூன் மாதத்திற்கான பங்குஈவுத்தொகை, வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|