பதிவு செய்த நாள்
30 ஜூன்2016
23:43
புதுடில்லி : ரேமண்ட் நிறுவனம், எப்.எம்.சி.ஜி., துறையிலும் இறங்க முடிவு செய்துள்ளது. ரேமண்ட் நிறுவனம், நாடு முழுவதும், 600 வினியோகஸ்தர்கள் மூலம், இரண்டு லட்சம் கடைகளில், ஜவுளி ஆடைகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், எப்.எம்.சி.ஜி., எனப்படும், விரைவாக விற்பனையாகும் பொருட்கள் சந்தையிலும் ஈடுபட முடிவு செய்துள்ளது. பார்க் அவென்யூ, பிரிமீயம், ட்ரூ டோன், போன்ற பொருட்களை விற்பனை செய்ய முடிவெடுத்து உள்ளது. இதுகுறித்து, ரேமண்ட் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ரேமண்ட் கடைகளில், இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி., பார்க் அவென்யூ உள்ளிட்டவற்றின் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. எங்கள் கடைகள் மூலம், இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரபலமான தயாரிப்புகளை, வாடிக்கையாளர்கள் வாங்குவர் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|