பதிவு செய்த நாள்
30 ஜூன்2016
23:44
புதுடில்லி : தபால் துறை அமைக்க உள்ள, பேமன்ட்ஸ் வங்கியின் உயர் பதவியில், வங்கி துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இந்திய தபால் துறை பேமன்ட்ஸ் வங்கி அமைக்க, ரிசர்வ் வங்கி, 2015 செப்., மாதம், கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, 2017 மார்ச் மாதத்திற்குள், வங்கி சேவையை துவக்கி, அதே ஆண்டு, செப்., மாதத்திற்குள், 650 கிளைகளை துவக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில், தபால் துறை செயலர் எஸ்.கே.சின்ஹா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, கனரா பேங்க், யூனியன் பேங்க் ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்களுக்கு, கடிதம் எழுதி உள்ளார். அதில், ‘தங்கள் வங்கி இயக்குனர் குழு அல்லது, உயரதிகாரிகள் குழுவில் உள்ள அதிகாரிகள், பேமன்ட் வங்கியில் பணிபுரிய விருப்பம் இருந்தால் தெரிவிக்கலாம்’ என, எழுதி உள்ளதாக தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|