பதிவு செய்த நாள்
30 ஜூன்2016
23:46
வாஷிங்டன் : அமெரிக்க செனட் நீதிக் குழுவிடம், அந்நாட்டு வர்த்தக ஆணையம் அளித்துள்ள அறிக்கை விவரம்:அமெரிக்காவில் முதியோர்களிடம், இந்திய கால்சென்டர் அழைப்புகள் மூலம், பல்வேறு வழிகளில் முறைகேடாக பணம் பறிக்கப்படுகிறது. முதியோரிடம், லாட்டரி, பரிசுக் கூப்பன் போன்றவற்றில் பெருந்தொகை கிடைத்துள்ளதாக, கால் சென்டர் அழைப்புகள் மூலம் ஆசைவார்த்தை கூறுகின்றனர். பின், கம்ப்யூட்டரில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்வதாக கூறி, முதியோர்களிடம் அனைத்து தகவல்களையும் திரட்டி, அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி விடுகின்றனர். இந்த மோசடியை தடுப்பது குறித்து, இந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு, அமெரிக்கா ஆலோசனை வழங்கி வருகிறது. மேலும், இந்திய கால் சென்டர் பிரதிநிதிகளுடன் முத்தரப்பு பேச்சும் நடத்தப்பட்டது. விரைவில், கால் சென்டர் மோசடிகளை தடுப்பது தொடர்பாக, இந்திய காவல் துறைக்கு பயிற்சி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|