பதிவு செய்த நாள்
30 ஜூன்2016
23:48
புதுடில்லி : ‘‘அரசு கொள்கைத் திட்டங்கள், முதலீடுகள் ஆகியவை, தொடரும்பட்சத்தில், வரும், 2025ல், இந்திய சுற்றுலா துறை, 4.60 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், மிக வேகமாக வளர்ச்சி காணும்,’’ என, அமெரிக்காவிற்கான இந்திய துாதர் ரிச்சர்டு வர்மா தெரிவித்துள்ளார்.
திட்டங்களும், முதலீடுகளும்...அவர் மேலும் கூறியதாவது: கடந்த, 2015ல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6.3 சதவீத பங்களிப்புடன், 3.70 கோடி வேலைவாய்ப்புகள், இந்தியாவின் பயணம் மற்றும் சுற்றுலா துறை வழங்கியுள்ளது. இத்துறையில், சரியானபடி முதலீடுகள் தொடர்ந்தால், வரும், 2025ல், 4.60 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்திய சுற்றுலா துறை, வளர்ச்சி கண்டு வருகிறது. எனினும், மேலும் வேகமாக வளர்ச்சி காண, அரசு கொள்கை திட்டங்களும், முதலீடுகளும் தொடர வேண்டும். குறித்த நேரத்தில் பயணம், அனைத்து பகுதிகளையும் இணைக்கும் விமான சேவை ஆகியவைதான், சுற்றுலா துறையின் வலுவான வளர்ச்சிக்கு முக்கியமான அம்சங்களாகும். கடந்த ஆண்டு, அமெரிக்காவில் இருந்து, 12 லட்சத்திற்கும் அதிகமானோர், இந்தியா வந்தனர். இது, இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில், 15 சதவீதமாகும்.
அமெரிக்க விசாஅமெரிக்க பொருளாதாரத்தில், இந்திய சுற்றுலா பயணிகளின் பங்களிப்பு, 1,100 கோடி டாலராக உள்ளது. வரலாறு காணாத வகையில், 2015ல், அமெரிக்கா, 10 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களின் விசா கோரிக்கைகளை பரிசீலித்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|