சுற்­றுலா துறையில் 4.60 கோடி வேலை­வாய்ப்புசுற்­றுலா துறையில் 4.60 கோடி வேலை­வாய்ப்பு ... ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு – ரூ.67.43 ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு – ரூ.67.43 ...
‘அரியர்ஸ்’ பணம் வரு­வதால் அரசு ஊழி­யர்­க­ளிடம் கார் விற்­பனை வாகன நிறு­வ­னங்கள் போட்டா போட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2016
23:49

புது­டில்லி : ஊதிய உயர்வு பெறும் மத்­திய அரசு ஊழி­யர்­க­ளுக்கு, கார்­களை விற்­பனை செய்­வதில், வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் தீவி­ர­மாக களம் இறங்­கி­யுள்­ளன.
மத்­திய அரசின், 50 லட்சம் ஊழி­யர்கள் மற்றும், 58 லட்சம் ஓய்­வூ­தி­யர்­க­ளுக்கு, 7வது ஊதியக் குழு பரிந்­து­ரைப்­படி, 23.5 சத­வீத ஊதிய உயர்வு வழங்­கப்­பட உள்­ளது. இது, இந்­தாண்டு, ஜன­வரி முதல், முன்­தே­தி­யிட்டு அம­லுக்கு வரு­வதால், மத்­திய அரசு ஊழி­யர்கள், ஓய்­வூ­தி­யர்­க­ளுக்கு கணி­ச­மாக, ‘அரியர்ஸ்’ பணம் கிடைக்கும்.
அரசு அதி­கா­ரி­களின் பங்­க­ளிப்பு :அத்­துடன், ஊதிய உயர்வு கார­ண­மா­கவும் பணப்­பு­ழக்கம் அதி­க­ரிக்கும் என்­பதால், அவர்­க­ளுக்கு கார்­களை விற்­பனை செய்ய, மாருதி சுசூகி இந்­தியா, ஹூண்டாய், ஹோண்டா உள்­ளிட்ட நிறு­வ­னங்கள் தீவி­ர­மாக கள­மி­றங்­கி­உள்­ளன. மாருதி சுசூகி நிறுவன செய்தி தொடர்­பாளர் கூறு­கையில்,‘வழக்­க­மாக, நிறு­வ­னத்தின் கார் விற்­ப­னையில், மத்­திய, மாநில அரசு அதி­கா­ரி­களின் பங்­க­ளிப்பு, 17 சத­வீ­த­மாக இருக்கும். இந்­தாண்டு, இது, 25 சத­வீ­த­மாக உயர்ந்து, 2.50 லட்சம் கார்கள் விற்­ப­னை­யாகும் என, தெரி­கி­றது. இதற்கு, ‘சியஸ், எர்­டிகா, விட்­டாரா பிரெஸ்ஸா’ உள்­ளிட்ட புதிய மாடல்கள் துணை புரியும்’ என்றார்.
ஹோண்டா கார்ஸ் இந்­தியா நிறு­வ­னத்தின் மூத்த துணை தலைவர் ஜானேஸ்வர் சென் கூறும்­போது, ‘‘பணப்­பு­ழக்கம் கார­ண­மாக, அரசு ஊழி­யர்கள் ஆடம்­பர பொருட்­களை வாங்க அதிகம் செல­வி­டுவர். இதை கருத்தில் கொண்டு, கார் விற்­ப­னையை அதி­க­ரிப்­ப­தற்­கான திட்­டங்­களை வகுத்­துள்ளோம்,’’ என, தெரி­வித்­துள்ளார்.
புதிய சலுகைகள் :ஹூண்டாய் மோட்டார் இந்­தியா நிறு­வ­னத்தின் பொது மேலாளர் புனித் ஆனந்த் கூறு­கையில், ‘‘ஊதிய உயர்வு, அரசு ஊழி­யர்­களின் கார் ஆசையை நிறை­வேற்றும். அத்­த­கை­யோரை ஈர்ப்­ப­தற்­காக, ஏற்­க­னவே, கார் விற்­ப­னைக்கு அளித்து வரும் சலு­கை­க­ளுடன், ‘பிரைட் ஆப் இந்­தியா’ திட்டம் மூலம், கூடு­த­லாக, 7,000 ரூபாய் வரை சலு­கைகள் வழங்­கப்­படும்,’’ என, தெரி­வித்தார். இது­போல, கார் விற்­ப­னையை உயர்த்த, டாடா மோட்டார்ஸ், நிசான், போக்ஸ்­வேகன் உள்­ளிட்ட பல நிறு­வ­னங்கள் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளன. அவை, கவர்ச்­சி­க­ர­மான சலு­கை­க­ளுடன் கூடிய விற்­பனை மேம்­பாட்டு திட்­டங்­களை வடி­வ­மைத்து வரு­கின்­றன. விரைவில், இது பற்­றிய அறி­விப்­பு­களை நிறு­வ­னங்கள் வெளி­யிடும் என, கார் முகவர் ஒருவர் தெரி­வித்தார்.
கடந்த, 2008ல், ஆறா­வது ஊதியக் குழுவின் பரிந்­து­ரைப்­படி, மத்­திய அரசு ஊழி­யர்­க­ளுக்கு, இரு ஆண்­டு­க­ளுக்கு முன்­தே­தி­யிட்ட ஊதிய உயர்வு கிடைத்­தது. அப்­போது, கார் விற்­பனை, 20 சத­வீதம் அதி­க­ரித்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)