பதிவு செய்த நாள்
01 ஜூலை2016
10:29
மும்பை : ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவால், கடந்தவாரம் இதேவெள்ளியன்று இந்தியா உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளியாக அமைந்தது. ஆனால் இந்தவாரம் துவங்கியதிலிருந்தே பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டன. கடந்த நான்கு நாட்களாக பங்குச்சந்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டநிலையில் வாரத்தின் கடைசிநாளான இன்றும் இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகின்றன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 1-ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 220.29 புள்ளிகள் உயர்ந்து 27,200.01 புள்ளிகளிலும், நிப்டி 58.60 புள்ளிகள் உயர்ந்து 8,346.35 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் உயர்வு, ரூபாயின் மதிப்பு உயர்வு, அந்நிய முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|