பதிவு செய்த நாள்
04 ஜூலை2016
07:10
இரு சக்கர வாகன இன்சூரன்ஸ் பிரிவில் பலரும் நீண்ட கால காப்பீடு திட்டத்தை நாடுவது தெரிய வந்துள்ளது.இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு காப்பீடு பெறுவது கட்டாயமாகும். 2014ம் ஆண்டில், இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., நீண்ட கால வாகன காப்பீடு திட்டங்களை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது. இதனையடுத்து பல நிறுவனங்கள் நீண்ட கால வாகன காப்பீடு திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்நிலையில், தனியார் காப்பீடு நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், தன் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு ஆய்வு நடத்தியது. இதில் பெரும்பாலானோர் நீண்ட கால காப்பீடு திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். 51 சதவீதம் பேர் தற்போதைய பாலிசி முடிந்ததும் 3 ஆண்டு கால பாலிசி வாங்க விரும்புவதாக கூறியுள்ளனர். பலர் 4 அல்லது 5 ஆண்டு கால பாலிசி தேவை என்றும் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் புதுப்பிக்கத் தேவையில்லை என்பதை இதற்கான பிரதான காரணமாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|