பதிவு செய்த நாள்
04 ஜூலை2016
07:18
சண்டிகர் : ஹரியானா பால் அபிவிருத்தி கூட்டுறவு கூட்டமைப்பு, பசுவின் பாலை பெட்ரோல் நிலையங்களில் விற்பனை செய்ய இருக்கிறது.ஹரியானா மாநில அரசுக்கு சொந்தமான, ஹரியானா பால் அபிவிருத்தி கூட்டுறவு கூட்டமைப்பு, அதன் தயாரிப்பான விட்டா பால் மற்றும் பால் பொருட்களை இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக, அந்நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதையடுத்து, 1,500 இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் விட்டா பால் கிடைக்கும்.இந்த ஒப்பந்தம் ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் முன்னிலையில் கையெழுத்தானது. அப்போது, அவர் ஹரியானா அரசுதான், முதன்முதலாக நாட்டுப் பசுவின் பாலை விற்பனை செய்து வருவதாகவும் இதற்காக, 5,000 லிட்டர் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் சில நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|