பதிவு செய்த நாள்
04 ஜூலை2016
07:20
மும்பை : அமெரிக்காவைச் சேர்ந்த, ஆர்.ஜி.ஏ., என, சுருக்கமாக அழைக்கப்படும், ரீஇன்சூரன்ஸ் குரூப் ஆப் அமெரிக்கா நிறுவனம், ஆயுள் மற்றும் மருத்துவ மறுகாப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அயர்லாந்தைச் சேர்ந்த அதன் துணை நிறுவனம் மூலம், இந்தியாவில், 23 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு, சேவைகளை வழங்கி வருகிறது. இனி நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நோக்கில், இந்தியாவில் ஒரு கிளையை துவக்க, ஆர்.ஜி.ஏ., முடிவெடுத்து, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான – ‘இரிடா’ விற்கு விண்ணப்பித்தது. இதற்கு, இரிடா இயக்குனர் கூட்டத்தில், முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, இறுதி ஒப்புதல் கோரி, ஆர்.ஜி.ஏ., மீண்டும் மனு அளிக்கும். இந்த மனு, அடுத்து கூட உள்ள, இரிடா இயக்குனர் குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு, ஆர்.ஜி.ஏ.,வுக்கு அனுமதி கொடுப்பது பற்றி, இறுதி முடிவு எடுக்கப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|