பதிவு செய்த நாள்
04 ஜூலை2016
07:20
புதுடில்லி : பொது துறையைச் சேர்ந்த, ஐ.டி.டி.சி., எனப்படும், இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தில், மத்திய அரசு, 87.03 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. இதில், 12.03 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 260 கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பங்கு வெளியீட்டை நிர்வகிக்க, வணிக வங்கிகள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை, வரும், 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.டி.சி., நிறுவனம், 1966ல் தோற்றுவிக்கப்பட்டது. நாட்டின் முக்கிய நகரங்களில், ‘அசோகா’ பிராண்டு பெயரில், எட்டு ஓட்டல்களை நிர்வகித்து வருகிறது. அத்துடன், கூட்டாக, ஐந்து ஓட்டல்கள், ஓர் உணவு விடுதி, 11 போக்குவரத்து மையங்கள், விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில், 9 சுங்க வரியில்லா விற்பனை கூடங்களை நிர்வகித்து வருகிறது. மத்திய அரசு, பொது துறை நிறுவனங்களில், நடப்பு நிதியாண்டில், பங்கு விற்பனையில், 56,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|