பதிவு செய்த நாள்
04 ஜூலை2016
07:22
புதுடில்லி : கடந்த மாதம், இந்தியாவில் உள்ள சிறிய நகரங்களிலும், விமான போக்குவரத்து சேவையை வழங்க, மத்திய அரசு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருவதாக, மத்திய சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்திருந்தார்.
மேலும் சிறிய நகரங்களுக்கு இடையே வழங்கப்படும் விமான சேவை, ஒரு மணிநேரத்திற்குள் இருக்கும். இதற்கான கட்டணமும், 2,500 ரூபாய்க்குள் மட்டுமே இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த ஓர் ஆண்டுக்குள்ளாக, 90 புதிய விமான நிலையங்கள் செயல்பட துவங்கும் என, விமான போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பு தெரிவித்திருக்கிறது.
இதற்காக அண்மையில் கட்டப்பட்ட, 30 விமான நிலையங்களும், முடிவுறும் தறுவாயில் இருக்கும், 60 விமான நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு இவ்விஷயத்தில் தீவிரமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|