பதிவு செய்த நாள்
05 ஜூலை2016
04:52
சென்னை : சென்னையைச் சேர்ந்த ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கு, தமிழகத்தில், ஆலத்தியூர், விருதுநகர் ஆகிய இடங்களில், சிமென்ட் தொழிற்சாலைகள் உள்ளன. இத்துடன், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும், தலா ஒரு சிமென்ட் தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலைகளில், ஆண்டுக்கு, 1.45 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. ராம்கோ சிமென்ட்ஸ், அதன் ஆலத்தியூர் ஆலைக்கு சொந்தமான, மின் நிலையத்தின் உற்பத்தி திறனை, 42 மெகாவாட் ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, 21.42 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ள, இந்த விரிவாக்க திட்டத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. ‘நிலக்கரி வாயிலான மின் உற்பத்தியின் போது வெளியேறும் சாம்பல் துகள், அருகில் உள்ள விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன், அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என, சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|