பதிவு செய்த நாள்
06 ஜூலை2016
04:56
மும்பை : ஜெனிசிஸ் கலர்ஸ் நிறுவனம், ‘அர்மானி ஜீன்ஸ், பால் ஸ்மித், சத்யபால்’ உள்ளிட்ட புகழ்பெற்ற பிராண்டுகளின், நவநாகரிக ஆடைகள், தோல் பைகள், காலணிகள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம், துவக்க காலத்தில் பெற்ற முதலீடுகளை, முதலீட்டாளர்களுக்கு திரும்பத் தரவும், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக, பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 600 – 650 கோடி ரூபாய் திரட்ட, இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, ஜெனிசிஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: பங்கு வெளியீடு தொடர்பான பணிகளை மேற்கொள்ள, வணிக வங்கிகளை தேர்வு செய்வது குறித்து, ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில், முடிவு எட்டப்பட்டதும், முறைப்படி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம், பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்படும். அனுமதி கிடைத்ததும், பங்கு வெளியீடு துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|