பதிவு செய்த நாள்
06 ஜூலை2016
04:57
புதுடில்லி : பானசோனிக் இந்தியா நிறுவனம், மொபைல் போன் பாகங்களை இறக்குமதி செய்து, டில்லி அருகே, நொய்டாவில் உள்ள தொழிற்சாலையில் ஒருங்கிணைத்து, விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம், அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில், முழுமையாக மொபைல் போன்களை, இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், முழுக்க, முழுக்க இந்தியாவில், மொபைல் போன்கள் தயாரிக்கப்பட உள்ளன. பானசோனிக் நிறுவனம், சமீபத்தில் மொபைல் போன் உற்பத்தி திறனை, மாதம், 8 லட்சம் என்ற அளவில் இருமடங்கு உயர்த்தி உள்ளது. இந்நிறுவனம், கடந்த ஆண்டு, 15 லட்சம் மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் இருந்து, நேபாளம், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகளுக்கு மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில், உள்நாட்டின் பங்களிப்பு, 80 சதவீதமாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|