பதிவு செய்த நாள்
06 ஜூலை2016
04:58
மும்பை : எஸ்.ஏ.ஆர்., குழுமத்தைச் சேர்ந்த, ‘லிவ்பியூர்’ நிறுவனம், தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனத்திற்கு, மானேசர் என்ற இடத்தில் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலை, ஆண்டுக்கு, மூன்று லட்சம் தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்களை தயாரிக்கும் திறன் உடையது. லிவ்பியூர் நிறுவனம், அதன் விற்பனையை, அடுத்த மூன்று ஆண்டுகளில், அதிகரிக்க முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில், தண்ணீர் சுத்திகரிப்பு துறை சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது, இந்த துறையின் சந்தை மதிப்பு, 3,500 கோடி ரூபாய் – 4,000 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. இத்துறை, வரும், 2021ல், 10 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. வரும், 2019ல், இந்நிறுவனம், 800 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|