பதிவு செய்த நாள்
06 ஜூலை2016
04:59
மும்பை : இந்தாண்டு, ஏப்., – ஜூன் வரை, புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 5,855 கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளது. இது, கடந்த ஒன்பது ஆண்டு களுக்கு பின், இதே காலாண்டில் திரட்டப்பட்ட அதிகபட்ச தொகையாகும். இதற்கு முன், 2007 ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், அதிகபட்சமாக, 13,083 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.மதிப்பீட்டு காலாண்டில், ஆறு பெரிய நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டு, 5,728 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், 13 பங்கு வெளியீடுகள் மூலம், 127 கோடி திரட்டப்பட்டது. பெரிய நிறுவனங்களின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. சிறிய மற்றும் நடுத்தர நிறுவன பங்குகள், அவற்றுக்கென உள்ள பிரிவில் பட்டியலிடப்பட்டன.தொழில் துறை வளர்ச்சி சூடுபிடித்திருப்பதால், வரும் மாதங்களில், பங்கு வெளியீடுகள் அதிகம் இருக்கும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|