முக்­கிய நக­ரங்­களில் வீடு விற்­பனை சூடு பிடிக்­கி­றதுமுக்­கிய நக­ரங்­களில் வீடு விற்­பனை சூடு பிடிக்­கி­றது ... நிதி­யாண்டை மாற்ற திட்டம் பரி­சீ­லனை குழு அமைப்பு நிதி­யாண்டை மாற்ற திட்டம் பரி­சீ­லனை குழு அமைப்பு ...
தொழில் முனை­வோ­ருக்கு சலு­கைகள்; ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­களில் முத­லீடு; அரசு விதி­மு­றைகள் மேலும் தளர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2016
05:49

மும்பை : இந்­தி­யாவில் சுல­ப­மாக தொழில் துவங்­கு­வ­தற்கு வச­தி­யாக, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­வ­தற்­கான விதி­மு­றைகள், மேலும் தளர்த்­தப்­பட்­டுள்­ளன.
வலை­தளம் மூலம் புது­மை­யான தொழில்­களில் ஈடு­படும் நிறு­வ­னங்கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் என, அழைக்­கப்­ப­டு­கின்­றன. இந்­நி­று­வ­னங்­க­ளுக்கு நிதி­யு­தவி செய்­வ­தற்­காக, மத்­திய அரசு, 10 ஆயிரம் கோடி ரூபாய் முத­லீட்டில், நிதியம் அமைக்­கி­றது. மேலும், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்கு, மூன்று ஆண்­டு­க­ளுக்கு வரு­மான வரி, மூல­தன ஆதாய வரி ஆகி­ய­வற்றில் இருந்து விலக்கு அளிக்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன், தொழி­லாளர் நல அதி­கா­ரிகள் ஆய்வில் இருந்து விலக்கு; சுய சான்­றுடன் தொழில் நடத்த அனு­மதி உட்­பட, பல்­வேறு சலு­கைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களை மேலும் ஊக்­கு­விக்கும் வகையில், முத­லீட்டு விதி­மு­றை­களை மத்­திய அரசு மேலும் தளர்த்­தி­யுள்­ளது.
இது குறித்து, மத்­திய நிறு­வ­னங்கள் விவ­கா­ரங்கள் அமைச்­சகம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், ‘ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள், ‘கன்­வர்­டபிள் நோட்’ வாயி­லாக, முத­லீட்டை திரட்டிக் கொள்­ளலாம்’ என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி, ஒரு நிறு­வனம், ஒரு முறை மட்டும், 25 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்­பட்ட தொகையை, கன்­வர்­டபிள் நோட் மூலம் பெற அனு­ம­திக்­கப்­ப­டும்; இது, நிறு­வ­னங்கள் திரட்டும், ‘டிபாசிட்’ பிரிவின் கீழ் வராது என, அரசு தெளி­வு­ப­டுத்தி உள்­ளது.
இதற்­காக, நிறு­வ­னங்­களின் டிபாசிட் ஏற்பு சட்ட விதி­களில் திருத்தம் செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு, கன்­வர்­டபிள் நோட் மூலம் திரட்­டப்­படும் நிதியை, ஐந்து ஆண்­டு­க­ளுக்குள், முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு பங்­கு­க­ளாக மாற்றித் தரவோ அல்­லது முத­லீட்டை திரும்ப அளிக்­கவோ, தற்­போது அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த வழியில் திரட்டும் முத­லீடு பற்­றிய விவ­ரத்தை, நிறு­வ­னங்கள் பதி­வாளர் அலு­வ­ல­கத்தில் தெரி­விக்க வேண்டும் என்ற விதி­மு­றையில் இருந்தும், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்கு விலக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­நி­று­வ­னங்­க­ளுக்கு, டிபா­சிட்டை திரும்ப அளிப்­ப­தற்­கென, கையி­ருப்பு கணக்கை துவக்கி, பரா­ம­ரிக்க வேண்டும் என்ற விதி­மு­றையில் இருந்தும் விலக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.
இந்த சலு­கைகள் அனைத்தும், தொழில் கொள்கை மற்றும் மேம்­பாட்டு துறையின் விதி­மு­றை­களை பூர்த்தி செய்யும் ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்கு மட்­டுமே பொருந்தும் என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மத்­திய அரசு, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களின் முத­லீடு தொடர்­பான விதி­மு­றை­களை, இரண்­டா­வது முறை­யாக தளர்த்­தி­யுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.
வரி சலு­கை­க­ளுக்கு விண்­ணப்பம் கடந்த ஜூன் இறு­தி­வரை, வரிச் சலு­கை­க­ளுக்­காக, 571 ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் விண்­ணப்­பித்­துள்­ளன. அதில், 106 நிறு­வ­னங்­களின் கோரிக்­கைகள் பரி­சீ­ல­னைக்கு ஏற்­கப்­பட்­டுள்­ளன. அவற்றில், பெரும்­பான்­மை­யான நிறு­வ­னங்கள், கடந்த ஏப்­ர­லுக்கு முன் பதிவு செய்­யப்­பட்­டவை என்­பதால், அவற்­றுக்கு வரிச் சலுகை தவிர்த்து, இதர சலு­கைகள் கிடைக்கும். வரிச் சலு­கை­க­ளுக்கு, 12 நிறு­வ­னங்கள் தகுதி பெற்­றுள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)