பதிவு செய்த நாள்
08 ஜூலை2016
04:38
புதுடில்லி : இந்திய நிறுவனங்களில், அன்னிய நிறுவனங்கள், 643 கோடி ரூபாய் முதலீடு செய்ய, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அட்வான்ஸ்டு என்ஸைம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில், அன்னிய நிறுவனங்கள், 420 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதுபோல, கோரோன் ரெமிடீஸ் நிறுவனத்தில், மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த, சைடிஸ்டா நிறுவனம், 118 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது.மேக்மில்லன் பப்ளிஷர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், 28.20 கோடி ரூபாய், ஆர்டெய்ன் ஹெல்த்கேர் குளோபல், 77.05 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகளை ஈர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஐ.பி.எம்.இந்தியா உள்ளிட்ட எட்டு நிறுவனங்களின், அன்னிய முதலீட்டு திட்டங்கள் குறித்த பரிசீலனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|