பதிவு செய்த நாள்
08 ஜூலை2016
04:40
மும்பை : ஹரியானா மாநிலம், குர்கானில், இண்டஸ் இண்ட் வங்கியின் ஏ.டி.எம்., மையத்தில், ‘செக்’ மூலமும் பணம் பெறும் வசதி அறிமுகமாகி உள்ளது.என்.சி.ஆர்., கார்ப்பரேஷன் நிறுவனம், இந்த ஏ.டி.எம்., இயந்திரத்தை தயாரித்து நிறுவியுள்ளது. இதில், ‘டெபிட் கார்டு’ மட்டுமின்றி, ‘செக்’ மூலமும் பணம் பெறலாம். ஏ.டி.எம்., இயந்திரத்தில், செக்கை செருகியதும், அது, அப்படியே ‘ஸ்கேன்’ செய்யப்பட்டு, வங்கி அலுவலரின் பார்வைக்குச் செல்லும். அவர், செக்கில் உள்ள கையெழுத்தை ஊர்ஜிதப்படுத்தி, அனுமதி அளித்த அடுத்த நொடியில், ஏ.டி.எம்., இயந்திரம் பணம் அளிக்கும். இதற்காக, இண்டஸ் இண்ட் வங்கி, பிரத்யேக அலுவலர்களை நியமித்துள்ளது. தொலைதுாரத்தில் இருந்து ஏ.டி.எம்.,மை இயக்கும் இந்த தொழில்நட்பம், தற்போது சோதனை அடிப்படையில் அறிமுகமாகி உள்ளது. விரைவில், நாடு முழுவதும் நிறுவப்படும் என, தெரிகிறது. இதன் மூலம், ‘வங்கி எப்போது திறக்கும்; பணம் எப்போது கிடைக்கும்’ என, செக் உடன் காத்திருக்கும் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|