பதிவு செய்த நாள்
08 ஜூலை2016
04:41
மும்பை : கோககோலா இந்தியாவிற்கு, முதல் முறையாக, பெண் ஒருவர் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார்.
கோககோலா நிறுவனம், உலகின் பல நாடுகளில், குளிர்பானங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, கோககோலா நிறுவனத்தின், இந்தியா மற்றும் தென் மேற்கு ஆசிய நாடுகளுக்கான தலைமை நிதி செயல்பாட்டு அதிகாரியாக சஞ்சீவ் குமார் உள்ளார். இந்த நிலையில், முதல் முறையாக, கோககோலா இந்தியாவிற்கான தலைமை நிதி அதிகாரியாக சர்விதா சேதி என்ற பெண் அதிகாரியை நியமிக்க, அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தற்போது, சர்விதா சேதி, கோககோலாவின் ஏதென்ஸ், கிரீஸ் நாட்டு நிதி பிரிவு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர், ‘பேச்சை குறைத்து செயலில் காட்ட வேண்டும்’ என்பதில் முனைப்பு காட்டுபவராக விளங்குபவர் என, பெயர் எடுத்து உள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்டெயின்ஸ்ப்ரோ, வயாகாம் உள்ளிட்ட நிறுவனங்களில், சர்விதா சேதி, ஏற்கனவே பணிபுரிந்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|